கவிமணி தேசிக விநாயகம் (ஜுலை 27, 1876 - செப்டம்பர் 26, 1954) கன்னியாகுமரி மாவட்டத்தில் தேரூர் என்னும் ஊரில் சிவதாணுப்பிள்ளை - ஆதிலட்சுமி க்கு ஜுலை 27, 1876 அன்று பிறந்தார்.
உமையம்மை எனும் பெண்ணை 1901ல் மணம் முடித்தார். எட்வின் ஆர்னால்டின் 'ஆசிய ஜோதி' யைத் தமிழில் தழுவி எழுதினார்.
பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களான இம்மை பற்றிய ரூபாய்த் (4 அடி செய்யுள்) தழுவி தமிழில் எழுதினார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார்.
கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார்.
இவர், ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை ஆகிய கவிதை நூல்களையும் உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் படைத்துள்ளார்.
சிறப்பு பெயர்
கவிமணி (சென்னை மாகாணத் தமிழ் சங்கத்தின் தலைவர் உமாமகேசுவரனார்)
குழந்தை கவிஞர்
தேவி
நாஞ்சில் நாட்டு கவிஞர்
தழுவல் கவிஞர்
பெற்ற சிறப்புகள்
1940 - பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்வேள் உமா மகேசுவர பிள்ளை அவர்கள் கவிமணி என்ற பட்டம் வழங்கினார்.
1943 - அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பெரும் பொருள் வழங்க முன் வந்த போது அதை வாங்க மறுத்துவிட்டார்.
1954 - கவிமணிக்கு தேரூரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது.
2005 - இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது.
கவிமணி பெற்ற விருதுகள்
1954 இல் தேரூரில் நினைவு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசு அக்டோபர் 2005 ஆம் ஆண்டு இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.